அடியேன்

My photo
தூங்காத கனவோடு துவளாத முயற்சியில் ஓயாது உழைப்பது தான் என் தீராத ஆசை. மற்றபடி வெற்றியோ, தோல்வியோ நான் கணக்கில் கொள்வதில்லை.
Showing posts with label சாமானியன். Show all posts
Showing posts with label சாமானியன். Show all posts

Wednesday, October 7, 2015

உலகமயமாக்கல் என்ன செய்யும்....



10 அண்ணாச்சி கடைகளை முடக்கிவிட்டு....
ஒற்றை super market வருவதால் சமத்துவம் என்ன ஆகும்....

5 திரையரங்குகள் கட்டி ஒற்றை ஆளாய்
நாளுக்கு 3 வேளை 15 காட்சிகள் காட்டி
பணம் பார்க்க வேண்டியதன் அவசியம் என்ன.....

10 ரூபாய் கூட பெறாத capachino cofee-ஐ
80 ரூபாய்க்கு ஏன் விற்க வேண்டும்....

வேறொரு மாநிலத்தில் திரையரங்கில் குடிதண்ணீர் கொண்டுவருதற்கு தடை விதித்தால்...
நிர்வாகம் சுகாதாரமான தண்ணீர் கட்டணமின்றி வழங்கியாக வேண்டும் என்று கட்டளையிட்டுருக்கிறது நீதிமன்றம்....
ஆனால், இங்கோ....
குழந்தைக்கு புட்டிப்பாலோ... ஏன் ரொட்டித் துண்டோ திரையரங்க வளாகத்துக்குள் இன்று உங்களால் கொண்டு செல்ல முடியுமா....

மதுவின் மயக்கத்தில் நம்மை கட்டிவைத்துவிட்டார்கள்....
நாம் கேள்வி கேட்பதை நிறுத்திவிட்டோம்....

corporate-களுக்கு இவையெல்லாம் லட்டுப் பண்டங்களைப் போல....
எக்குறையுமின்றி ஆளவட்டம் போடுகிறார்கள்....

முதலாளித்துவத்துக்கு மிகச் சில கூர்மையான உதாரணங்களில் இவையெல்லாம் சில....

இவற்றை வளரவிடுவதால்......

முதலில் உங்கள் தொழில் பறிபோகும்...
பிறகு உங்கள் மொழி பறிபோகும்...
பின் உங்கள் மதம் பலியாகும்...
சொந்தத் தொழிலை corporate தவிர
எவனும் துவங்க முடியாது.

அவன் சொல்வது சட்டமாகும்.
சனநாயகப் போர்வையில் corporate அரசாளும்...

வட்டார வழக்குகள் அழியும்....
உள்நாட்டு வாணிபம் அபகரிக்கப்படும்....
நாகரிகத்தின் தடயங்களைப் புதைப்பார்கள்...

காலங்காலமாக நீங்கள் பண்பென்று போற்றியதை இழிவென்று நகைப்பார்கள்.

உங்கள் கலாசாரத்தை குழிதோண்டிப் புதைத்து
அதன் மேல் களியாட்டம் போடுவார்கள்.

உங்களின் உயர்வான நாகரிகம்
உங்கள் மகனாலே அநாகரிகமென்று நகைக்கப்படும்.

பாசம், பண்பெல்லாம் கடைச்சரக்கு என்றாகும்.
கம்யூனிசத்தை நசுக்குவார்கள்.
சமத்துவத்தை பொசுக்குவார்கள்.

சுயதொழில் அழியும்.
அனைவரும் பணியாளர் (அடிமைகள்) என்ற கலாசாரம் உருவாகும்.
தொழிலாளர் உரிமையெல்லாம் காற்றில் பறக்கும்.

corporate-ன் கொட்டம் உச்சியில் நிலைகொள்ளும்.
மீண்டும் ஒரு தொழிற்புரட்சிக்கு இன்னொரு பிரெடெரிக் ஏங்கல்ஸூம், காரல் மார்க்கஸூம் தேவைப்படுவார்கள்.

இதற்குள் உங்கள் மொழி, மதம், இனம், பண்பாடு, கலாசாரம், நாகரிகம் என்ற சமூகக் கூறுகள் அனைத்தையும் அவன் மாற்றி வைத்திருப்பான்.

நான் மதுரை என்று சொல்லிக்கொள்வதில் எனக்கென்ன வெட்கம்.
நான் திருநெல்வேலி எனச் சொல்லிக்கொள்வதில் எனக்கென்ன அவமானம்.

இங்கே நேர்மையைத் திறமையானவர் மட்டுமே கடைபிடிக்க முடியும். இது ஒரு மோசமான சமூகப் பிழை.
திறமை உண்டோ இல்லையோ.... நேர்மை தவறக்கூடாது. ஆனால்,
திறமையற்றவர் நேர்மையாக இருந்தால் அறிவற்றவர் என்று இகழப்படுகிறார்.
தான் ஏதோ ஒன்றில் திறமையற்றவர் என்ற ஒப்புதலுக்காக மொத்தமாகவே திறமையற்றவர் என்று முத்திரை குத்தி வெளியேற்றப்படுகிறார்.
ஒற்றைக் காரணத்தின் பின் அத்தனை அரசியலையும் செய்து வீழ்த்தி விடுகிறார்கள்.

சமுதாயத்தில் திறமையின்றி நேர்மையாய் இருப்பது என்பது...
போர்க்களத்தில் வாள், கேடயமின்றி வீரனாய் இருப்பதற்கு ஒப்பானது...

வீரனுக்குப் புல்லும் ஆயுதம் தான்....
அரசியல், அதிகார, ஆள் மற்றும் பண பலத்துடன் எதிர்ப்பவன்
புல் கூட கண்ணுக்குப் புலனாகிவிடக்கூடாது என்கிற எச்சரிக்கையோடு களமாடுகிறவனாய் இருக்கையில்....
யாதுமற்ற நிராயுதபாணியாய் ஒற்றை வீரத்தை மட்டும் கொண்டு பாவம்.... வீரன் தான் என்ன செய்வான்....

எதிரியின் களத்தில் முதல் அடியை வைக்கும் போதே இரண்டு கால்களையும் தூர இருந்தே துண்டித்துவிடுகிறார்கள்....
அதனாலேயே அனைவரும் பின்வாங்குகிறார்கள்....

எப்படியிருந்தாலும்,
அடிமையாய் இருப்பதை விட வீரனாய் வீழ்வதே மேல்.

ஆனால், இதற்கான தீர்வு....
நேர்மையைத் தவற விடுவதல்ல....
கோழையாய் வாழ்வதில் அல்ல....

வாளும், கேடயமும் பெற்றுக்கொள்வது...
திறமையை வளர்த்துக்கொள்வது....

எரியும் ஈட்டியில்
எதிரியின் நெஞ்சுபிளக்க....
குறிவைக்கும் ஆற்றலை
வென்றெடுப்பது....

இங்கே அம்பினைக் கையிலெடுப்பதை
எதிரி கண்டுகொண்டால்
அங்கே அவனின் குலை நடுங்க வேண்டும்....

மதுவை ஒழியுங்கள்....
சிலிர்தெழுங்கள்...
விழிப்பு கொள்ளுங்கள்....

வாளையும், கேடயத்தையும் நாம் பெற்றுவிடக்கூடாது என்பதற்காக எதிரி செய்யும் சதி தான்
super market மற்றும் multiplex

வீரனாய் எழுந்துவிடக்கூடாது என்பதற்காக விரிக்கப்பட்ட வலை தான்
மதுவென்னும் போதை.....

ஒரு ரூபாயும், இரண்டு ரூபாயும் பெருமானமுள்ள
சீப்பையும், சோப்பையும் விற்றுத்தான்
corporate வியாபாரம் செய்ய வேண்டுமா....

corporate வருமானம் தேடிக்கொள்ள ஆயிரம் பெருமுதலீட்டுத் தொழில்கள் உண்டு.....

சமானியன் வாய்ப்பையும் சுரண்டிப்பறித்து பணம் சேர்க்க வேண்டும் என்று corporate-களுக்கு அவசியம் என்ன.....

கொள்ளை கொள்ளையாய் பணம் சேர்க்கும் ஆசை....

அதற்காக எவரின் வாழ்வையும் வேரொடு பிடிங்கி எறிய
ஈவிறக்கமின்றி எதையும் செய்யச் சொல்கிறது....
வாழ்வியல் தடயங்களை வேரோடு அழிக்க முனைகிறது.
மனித ஒழுக்கங்களின் மீது மிருக வேட்டையாடுகிறது...

சாமானியன் தனக்கான பிழைப்புக்கு எங்கே போவான்....
சாலையிலே கடைவிரித்து சொற்பப் பணம் ஈட்டலாம் என்றால்...
super market-ல் அதே பொருளுக்கு ஆயிரம் மடங்கு விலைகொடுப்பவர்கள்....
சாமானியரிடம் அந்தச் சொற்பத் தொகைக்கே பேரம் பேசுகிறார்கள்....

வியிற்றைக் கட்டி, வாயைக் கட்டி பல ஆண்டுகள் போராடி சில லட்சங்களைத் சேர்த்து சிறு பலசரக்குக் கடை விரித்தால்....
கோடிகளில் super market-களை நிறுவி 10 சுயதொழில் காரர்களை வேரோடு அழிக்கிறார்கள்....
அங்கே அழிவது 10 வியாபாரிகள் அல்ல... 10 குடும்பங்கள்.... 100 ஜீவன்கள்....

வாய்ப்பிழந்த இளைஞர்களெல்லாம்
வழியிழந்து பசிக்கிறையாகும்
ஒரு நாள் வரும்....

எத்தனை உருண்டு புரண்டாலும்
சகவாழ்வை அடையமுடியாது
என்ற நிலை வரும் போது
தாம் நிர்க்கதிக்காளாக்கப்பட்டதன்
உண்மை புலனாகும்.

வயிறெரியச் சுயத்தை சூரியன் சுடும்போது
வாய்ப்பை அபகரித்துக்கொண்ட கயவர்களின்
உண்மை முகம் கைகொட்டிச் சிரிக்கும்...

காப்பாற்ற வழியின்றி
இறந்த உறவுகளும், இழந்த உறவுகளும்...
மனசாட்சியை உலுக்கும் தருவாயில்...
சூட்சிக்குள் சிக்க வைத்த
சூத்திரதாரியின் பெயர் விரியும்....

அயலான் விட்டெரிந்த
காசைக் கவ்விக்கொண்ட
அரசியல் கட்சிகளெல்லாம்
அடியோடு கவிழ்ந்துபோகும்...
அன்று - Brand-கள் பொடிபொடியாகும்....

அந்நியர் தொழிலகங்கள்
சாமானியர்கள் கரங்களால்
சிதறுண்டுபோகும்...

சொந்த நிலத்தின் வேர்வரை நீர் உறிஞ்சி
கோடிகோடியாய் குளிர்பானம் விற்றவர்கள்
வீதவீதியாய் விரட்டியடிக்கப்படுவார்கள்....

ஒற்றை ரூபாயையும் சாமானியனிடம்
விட்டுவைத்துவிடக்கூடாது என்கிற
கொத்தடிமை சூத்திரத்தின்
அதிபதிகள் அனைவரையும்

பொதுமக்கள் புடைசூழ
போக்கிடம் ஏதுமின்றி
வகையாய் வரிந்துகட்டி
நையப் புடைவார்கள்.

கீழ்வானம் சிவக்கும்....

பூமி எதிர்த்திசையில் சுழலும்....

தனி மனிதன் தன்
சந்தைப்படுத்தும் உரிமையை
மறுபடியும் தனக்கென மீட்டெடுப்பான்.

சொந்த மண்
சொந்த மாந்தர்களுக்கானாதாய் மாறும்...

சமத்துவம் சர்வமும் நிலைகொள்ளும்....

உலகம் தழைக்கும்!

ஊர் விளங்கும்!

ஏழை மகற்கும்
மூவேளை வயிறாரும்!


பசியுற்ற சாமானியன்,
-தமிழ் வசந்தன்